About Us
-
ஒரு மனிதனை யார் கைவிட்டலும்"ஆன்மீகம் " கைவிடாது - என்ற அழமான ஆன்மீகத்தை வெளிப்படுத்தி மதங்களை கடந்து உலக நாடுகளில் உறுதிப்படுத்தி, அமெரிக்காவில்
"ஜோதிட சாஸ்திரம்" மற்றும் "இரத்தினசாஸ்திர" துறைகளில் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார். - ஐந்து வயதில் இருந்தே ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆழமான ஈடுபாடும் அதிக நம்பிக்கையும் ஆழ்மனதில் இருந்ததால் மனித வாழ்க்கைக்கு தேவையான புனித வழிபாட்டு முறைகள் மற்றும் பிரார்த்தனை முறைகள் பற்றிய கேள்விகளையும், ஆய்வுகளையும் சிறுவயதில் இருந்தே மேற்கொண்டு ஆன்மீகம் என்பது மதங்களைக் கடந்து மனிதமனங்களை புனிதப்படுத்தும் "அற்புதம் " என்பதை எடுத்துச்சொல்லியுள்ளார்.
-
"அண்ட நிழலும் இல்லை ஆதரிப்பார் யாரும் இல்லை" என்ற நிலையில் ஏக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உள்ளங்களை ஊக்கப்படுத்தி உண்மையான வாழ்வியிலில்
"அவமானப்பட்ட" ஒவ்வொரு மனிதனுக்கும் வெகுமானம் உண்டு!
என்ற ஆன்மீக உண்மையை மதங்களைக்கடந்து உலக நாடுகளில் உறுதிப்படுத்தியவர் - சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா உட்பட ஆஸ்திரேலியா வில் "சிட்னி முருகர் கோவில்" மற்றும் "ஏடிபிசி" வானொலியில் சிறப்பு ஆன்மீக நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், சுவிட்ஷர்லேண்ட், கனடா, இங்கிலாந்து (லண்டன்) உட்பட மேற்கிந்திய நாடுகளில் உள்ள நேயர்களின் இக்கட்டான கேள்விகளுக்கு அப்பட்டமான ஆன்மீக விளக்கங்கள் கொடுத்து, வெளிநாட்டு மக்களாலும் பத்திரிக்கைகளாலும் பாராட்டுப் பெற்றுள்ளார்.
-
ஜோதிடம், ஆன்மீகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவைக்காக "மனிதருள் மாணிக்கம்" "மகாத்மா காந்தி” "சாதனைச்சிகரம்" ஆசிய விருதுகளும், பாராட்டுகளும் பெற்றதோடு
"சாணத்திற்கும்", மெஞ்ஞானத்திற்கும்"
உள்ள தாத்பர்யங்களை "விஞ்ஞானத்தோடு" விளக்கப் படுத்தி தமிழக ஆளுநர் அவர்களால் "ஆன்மீகச் செம்மல் விருது பெற்றுள்ளார்.
- தன்னுடைய அற்புதமான அன்மீக சொற்பொழிவால் "கேள்விக்குறியோடு உள்ள பலரது வாழ்க்கையை ஆச்சர்யக்குறியாக மாற்றி அமைத்துள்ளார்.
- ஒரு மனிதன் "பெற்றோராலோ" "மற்றோராலோ" உற்றார் உறவினராலோ "கைவிடப்பட்டாலும் ஆன்மீகம் கைவிடுவதில்லை"
- சன் நெட்வொர்க், ஜெயாடி.வி, ராஜ் டிவி, புதுயுகம் டிவி, நியூஸ் 18, வசந்த்டி.வி, கேப்டன் டி.வி, ஸ்ரீசங்கரா டி.வி, பெப்பர்ஸ் டிவி, வின் டிவி லோட்டஸ் டிவி, உட்பட பல்வேறு தொலைக் காட்சிகளில் "ராஜயோகம்" என்ற அற்புதமான நிகழ்ச்சியின் மூலம் நடுநிலையான கருத்துக்களை எதார்த்தாமாக எடுத்துச் சொல்லி "ஜோதிட நடுநிலைப் புயல்" என்று பாராட்டுப் பெற்றுள்ளார்
- "திக்கற்ற யாவரும்" "ஒப்பற்ற பயன் பெற வேண்டும்" என்ற அற்புத நோக்கத்தில் ஆன்மீகத்தோடு செயல்பட்டு "விரக்தி" என்ற நிலையில் உள்ளவர்களுக்கு விடியலை ஏற்படுத்தியுள்ளார்.
- மலேசியாவில் முன்னணி தமிழ் பத்திரிக்கைகளாக விளங்கும். "மலேசியா நண்பன்" பத்திரிக்கையில் "எண் கணித பலனும்" "மக்கள் ஓசை" பத்திரிக்கையில் "தினப்லனும்" எழுதி மலேசியா மக்களின் பெருவாரியான நற்மதிப்பை பெற்றுள்ளார்.
- ஸ்ரீலங்காவில் தமிழ் பத்திரிக்கைகளாக விளங்கும் "வீர கேசரி" தினசரி பத்திரிக்கையில் "தினப்பலன் எழுதி தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள்" உட்பட இலங்கை மக்களின் இதயத்தில் இடப் பிடித்துள்ளார்.
- "அஸ்ட்ரோ" "நியூமரோ" "வாஸ்து" சாஸ்த்திரங்களின் உண்மையான தாத்பர்யங்களை நன்மையான வகையில் உலக மக்களுக்கு தெளிவுப் படுத்திய ஒரே ஆய்வாளர் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளார்.
- வம்சாவளித் தெய்வமாகிய "குலதெய்வ மகிமையை" ஆழமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
- "பரிகார ஸ்தலம்" "புண்ணிய ஸ்தலம் " வழிபாட்டு முறைகளை வகுத்துச் சொல்லி உலக அரங்கில் ஜோதிடத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
- "ஆன்மீகம்" பற்றிய ஆழமான கருத்துக்களை "பாமரர் முதல் படித்தவர் வரை" அனைவருக்கும் புரியும்படி பக்குவமாக எழுத்துச் சொல்லி பாராட்டுப் பெற்றுள்ளார்.
- ”செவ்வாய் தோஷம்” ”ஷர்ப்பதோஷம்” ”சனிதோஷம்” உட்பட பல்வேறு தோஷங்களைப் பற்றிய பய உணர்வுகளை போக்கி மக்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளார்
- மாற்றுச் சிந்தனை உள்ளவர்கள் கூட ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஜோதிடத்தை எடுத்துச் சொல்லி "ஜோதிடத் தென்றல் என்று பாராட்டுப் பெற்றுள்ளார்.
- ஒருவர் எந்த "தேதியில்" "ராசியில்" "நட்ஷத்திரத்தில்" பிறந்தவராக இருந்தாலும் நல்ல நேரமும் நன்மையான காலமும்,நிச்சயமாக உண்டு! என்ற இயல்பான உண்மையை எடுத்துச்சொல்லி ஏங்கித்தவிக்கும் மக்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளார்
- ஆழமான ஆன்மீகத்தையும் அறிய வேண்டிய ஜோதிடத்தையும் அற்புதமான மனோதிடத்தையும் அனைத்து மக்களுக்கும் வாரி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு “ அருள் ராஜயோகம்" ஆன்மீக மாத இதழ். ஆரம்பித்து ஆன்மீகம், ஜோதிடம், மருத்துவம் சம்பந்தமான மகத்தான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.
- இருக்கும் இடத்தில் "ஆன்மீகமும்' படிக்கும் உள்ளத்தில் "ஆறுதலும் " வசிக்கும் இல்லத்தில் ” அதிர்ஷ்டமும் கிடைக்கச் செய்யும், " தினம் ஒருத்திருத்தலம் என்ற ஆன்மீகம் நிறைந்த அதிசயமான புத்தகத்தை எழுதி வெளியிட்டு எண்ணற்ற மக்களை ஏற்றம் பெறச் செய்துள்ளார்.
- தனது முப்பது வருட ஆன்மீக ஆராய்ச்சியில் "தெய்வப் பிரசன்னம்" மற்றும் "பஞ்சபூத பிரசன்ன" சாஸ்திரப்படி கருவிலேயே நிர்ணயிக்கப்பட்ட யோகபலன்களை வாரி வழங்கும் வம்சாவளி தெய்வமாகிய "குல தெய்வ அருளும் கஷ்டங்களை போக்கும்" "இஷ்ட தெய்வங்களின் அனுகிரஹமும் நிறைந்த "வம்ச விருட்ஷம்" என்ற ஆன்மீகப்ப பொக்கிஷத்தை உருவாக்கி ஆழமானப் பிரார்த்தனை மூலம், "இழந்த செல்வம்" "இழந்த கெளரவம்" "கலைந்த குடும்பம்" "தொலைந்த நிம்மதி" இவை அனைத்தையும் இறை பலத்தால் திரும்பக்கிடைக்க செய்து " திக்கற்ற யாவரையும் ஒப்பற்ற பயன்பெற செய்துள்ளார்.
- "தமிழ்புத்தாண்டு பலன்" மற்றும் "ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள்" உட்பட "குருப்பெயர்ச்சி "சனிப்பெயர்ச்சி இராகு கேது பெயர்ச்சி' புத்தகங்கள் மூலம் தன்னுடைய தன்னலமற்ற எழுத்துக்களால் எண்ணற்ற குடும்பங்களில் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.
- தானத்தில்சிறந்தது அன்னதானம், வஸ்திரதானம், கண்தானம், ஸ்வர்ணதானம், கல்விதானம், ரத்ததானம் என்று பல்வேறு கருத்துக்களை, ஒவ்வொரு மணிதர்களும் வெவ்வேறு விதமாக சொல்லி வந்த வேளையில் தானத்தில் சிறந்தது "நிதானம்" என்ற உண்மையை ஒளிவுமறைவு இல்லாமல் உறுதியோடு எடுத்துச் சொல்லியுள்ளார்.
- சடங்குகள் மற்றும் சம்பிரதாயம் பற்றி சாஸ்திரங்களாலும், சான்றோர்களாலும் சொல்லிவைத்து சாக்ஷ்டாங்கமான உன்மைகளை சாதுர்யமாக எடுத்துசொல்லி சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார்.
- சடங்குகள் மற்றும் சம்பிரதாயம் பற்றி சாஸ்திரங்களாலும், சான்றோர்களாலும் சொல்லிவைத்து சாக்ஷ்டாங்கமான உன்மைகளை சாதுர்யமாக எடுத்துசொல்லி சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார்.
- மாற்றத்தை விரும்பியவர்களுக்கும், ஏற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கும் "ஜோதிடம்" என்ற கலை மூலம் "மனோதியம்" என்ற மலையளவு உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்தி, நம்பிக்கையான வாழ்கையை நாள்தோறும் வாழ நன்மைகள் புரிந்துள்ளார்.
-
ஒரு சமயம் ஆஸ்திரேலியாவில் "சிட்னி முருகர் கோவிலில்" ஆன்மிகச்சொற் பொழிவு நிகழ்ச்சி முடிந்தவுடன் மாற்று சிந்தனை உள்ள மதத்தை சார்ந்த ஒருவர் ஆன்மீகத்தை கடைப்பிடித்தால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா? என்ற கேள்வியை கிண்டலாக கேட்டவுடன் சற்றும் ஆன்மீகத்தை கடைபிடித்தால்
"நினைத்த காரியம் நிறைவேறும்"
என்பதைவிட கருவில் ” விதித்த பலன்கள் நிறைவேறும்" என்று நெத்தியடிமாக பதில் அளித்து புத்தி கூர்மையோடு செயல்பட்டுள்ளார். - தனம் கிடைக்க வேண்டிய அமைப்பு இருந்தால் தனம்" கிடைத்தே தீரும், " புகழ் கிடைக்க வேண்டிய அமைப்பு இருந்தால் புகழ் கிடைத்தே தீரும் " எனவே மனம் கலங்க வேண்டாம் என்று மனித உள்ளங்களுக்கு அறுதலான வார்த்தைகளை அள்ளி வழங்கியுள்ளார்
- வாழ்வு தாழ்வு வறுமை பெருமை என சக்கரம் சுழல்கின்றது- அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது. என்ற தன்னுடைய தன்நிகரற்ற வார்த்தைகளால் வறுமையால் வாடும் உள்ளங்களை பெருமை கொள்ளச் செய்துள்ளார்.
- கஷ்டப்படுகிற மனித வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தருகிற காலம் உண்டு என்ற உண்மையை ஆழமாக சொல்லி ஆறுதல் தந்தவர்